
ஆசிய விளையாட்டு டெக்பால் போட்டி பெண்கள் ஒற்றையர் ஏ பிரிவில் இந்தியாவின் குவிம்சி ஜோவாகிம் டிசவுசா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
லீக் சுற்றில் ஜப்பான் மற்றும் கம்போடியா வீரர்களை வீழ்த்தி அவர் 4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார்.
இந்தத் தொடரில் வெற்றி பெற்றால் டெக்பால் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றை அவர் படைக்கலாம்.