
இந்தோனேசியாவில் அரசின் இலவச மதிய உணவுத் திட்டத்தைச் சாப்பிட்ட 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் மயக்கம் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 1 முதல் 3 வரையிலான மூன்று நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், இது குறித்துத் தீவிர விசாரணை நடத்த மனித உரிமைகள் ஆணையம் கோரியுள்ளது.
2025 ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 36 மாகாணங்களில் 50,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகத் தரவுகள் தெரிவிக்கின்றன.