தாய்லாந்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தாக்குதல் நடத்திய மாணவன் தனது தாத்தா மற்றும் பாட்டியையும் கொன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில், பிரதமர் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.