ஜெர்மனியைச் சேர்ந்த முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், உலகளவில் 50,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
நிறுவனத்தின் லாபத்தை உயர்த்தவும், எதிர்காலத் திட்டங்களைச் செயல்படுத்தவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளன.