மலேசியாவில் அக்டோபர் 2 முதல் 4 வரை நடைபெறவுள்ள பார்முலா ஒன் பந்தயத்திற்கான பல மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பதிவுக்கட்டணத்தை பஹ்ரேன் அரசு விலக்கிக்கொண்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் பஹ்ரேனில் பந்தயம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால், மலேசியாவில் பந்தயத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செப்பாங் பந்தயத்தளத்தை மேம்படுத்த மலேசிய அரசு 10 மில்லியன் முதல் 16 மில்லியன் ரிங்கிட் வரை மட்டுமே செலவிடத் திட்டமிட்டுள்ளது.