
ராஜஸ்தானின் உஜ்ஜைன் கோவிலுக்குச் சென்ற நபர் ஒருவர், ஆயிரக்கணக்கான செருப்புகளுக்கு இடையே தனது செருப்பைத் தேட ChatGPT-யின் உதவியைப் பெற்றுள்ளார்.
கோவிலுக்கு வெளியே இருந்த செருப்பு குவியலில் தனது காலணியைக் கண்டுபிடிக்க ஏஐ தொழில்நுட்பம் வழங்கிய டிப்ஸ்களை அவர் பயன்படுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு குறித்துப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.