
திருச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) மூலம் உடனடியாக நிரப்ப கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.அ. நரேஷ் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மாணவர்களின் கற்றல் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
திருச்சி உறையூர் பாண்டமங்கலம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், மாணவர் சேர்க்கை மற்றும் கல்வித் தரம் குறித்து ஆலோசனை நடத்தினர்.