/nakkheeran/media/media_files/2026/09/16/krishnasamiadmk-2026-09-16-07-26-05.jpg)
வரும் அக்டோபர் மாதம் 6ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற அனைத்துக் கட்சிகளும் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன.
இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி மற்றும் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து ஆதரவு கோரியுள்ளனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தொகுதிகள் விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அதிமுக கூட்டணியில் இருந்து கிருஷ்ணசாமி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.