
வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீட்டை எதிர்த்து மு.க.ஸ்டாலினின் உறவினர் வழக்குத் தொடர்ந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சட்டப்பேரவையில் குற்றம் சாட்டினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஆதாரமற்ற குற்றச்சாட்டை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சி.வி.சண்முகம் ஆதாரம் காட்டத் தவறினால் அந்தப் பதிவை நீக்குவதாக சபாநாயகர் அறிவித்ததைத் தொடர்ந்து விவாதம் முடிவுக்கு வந்தது.