
துருக்கி ஆக்கிரமிப்பில் உள்ள வடக்கு சைப்ரசின் கைரேனியா நகரில் இருந்து 270 பயணிகளுடன் புறப்பட்ட படகு, நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கைரேனியாவில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்த நிலையில், மீட்புக்குழுவினர் விரைந்து சென்று பயணிகளை மீட்டனர்.
இந்த படகு விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டதா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.