
அமெரிக்காவின் சிகாகோ ஓஹேர் விமான நிலையத்தில் இருந்து சார்லோட் நகருக்கு புறப்படவிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் டயர்கள் வெடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
விமானத்தில் இருந்த 172 பயணிகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட சிப்பந்திகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தால் விமான சேவை 8 மணி நேரம் தாமதமானது.
கடந்த இரண்டு வாரங்களில் சிகாகோ விமான நிலையத்தில் நடக்கும் 5-வது டயர் வெடிப்பு சம்பவம் இதுவாகும் என மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.