
அமெரிக்காவில் நடக்கும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் காலிறுதியில், கோகோ காப் 6-2, 6-2 என்ற நேர்செட்டில் மார்த்தா கோஸ்ட்யுக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரான்சிஸ் டியாபோ 7-6, 7-5 என்ற செட் கணக்கில் லோரென்ஜா முசெட்டியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் பிரன்டன் நகாஷிமா 7-6, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் டெய்லர் பிரிட்சை சாய்த்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தார்.