
சர்வதேச கிரிக்கெட்டில் இனி எந்தவிதமான திட்டமிடலும் இல்லாமல் நடத்தப்படும் இருதரப்பு தொடர்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஐசிசி தெரிவிப்பதாக சஞ்சோக் குப்தா கூறியுள்ளார்.
ஒவ்வொரு இருதரப்பு தொடரும் வெறும் போட்டிகளின் தொகுப்பாக இல்லாமல், ரசிகர்களை ஈர்க்கும் வகையில் தெளிவான சூழல், பாரம்பரியம் மற்றும் போட்டித்தன்மையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கிரிக்கெட்டை நடத்த அதிக நிதி தேவைப்படுவதால், ரசிகர்களுக்கு முக்கியத்துவம் புரியாத தொடர்களை நாடுகளால் நீண்ட காலத்திற்கு தாங்கிக்கொள்ள முடியாது என ஐசிசி தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.