
ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 உறுப்பு நாடுகளிலும் 13 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களால் சிறார்களுக்கு மனநலப் பிரச்னைகள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பெற்றோரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் மற்றும் நேர வரம்பு உள்ள கணக்குகள் மட்டுமே இந்த வயதுடையவர்களுக்கு அனுமதிக்கப்படும்.