
ஏசியன் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் பாந்தர்ஸ் அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியன் ராயல்ஸ் அணி வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 167 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி 17.3 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.
ஆல்-ரவுண்ட் திறமையை வெளிப்படுத்தி 50 ரன்கள் எடுத்த ரிஷி தவான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார், இது இந்திய அணியின் 2-வது தொடர் வெற்றியாகும்.