
திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதாகக் கூறப்படும் தகவல்களை அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சட்டப்பேரவையில் மறுத்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக 1.35 கோடி வாக்குகளுடன் 53 இடங்களைப் பெற்றுள்ளதாகவும், யாருடைய தயவிலும் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
திமுகவை தீய சக்தி என்று எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா குறிப்பிட்ட வழியில், தற்போதைய அதிமுக தலைமை செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.