
சட்டமன்றத்தில் இன்று (27.08.2026) பேசிய தேமுதிக பிரேமலதா விஜயகாந்த், மானியக் கோரிக்கை விவாதங்களில் சண்டை போடுவதைத் தவிர்த்து மக்களுக்காகப் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தினமும் மாலை 6 மணி வரை வெறும் வாக்குவாதங்கள் மட்டுமே நடப்பதால், நான்கு மணி நேரத்திற்குள் இரண்டு மானியக் கோரிக்கைகளைக்கூட விவாதிக்க முடியவில்லை என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.
மக்கள் நலன் சார்ந்த விஷயங்களைப் பேசாமல் உறுப்பினர்கள் சண்டையிடுவதால், பொதுமக்கள் தொலைக்காட்சியை அணைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.