
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குவெட்டா அருகே நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட மீத்தேன் வாயு வெடிவிபத்தில் 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள 24 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு தொழிலாளியின் குடும்பத்திற்கும் 5,00,000 பாகிஸ்தான் ரூபாயை இழப்பீடாக மாகாண அரசு வழங்கும் என்று அமைச்சர் ஷோயப் நோஷர்வானி அறிவித்துள்ளார்.