
கிரீஸ் நாட்டின் மேற்கு ஏதேன்ஸ் பகுதியில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்களில் மொத்தம் 4 பேர் பயணித்த நிலையில், அவர்களின் தற்போதைய நிலை குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
வனப்பகுதியில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்களைத் தேடும் பணியில் ராணுவத்தினரும் போலீஸாரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.