
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட வழங்கிய பணத்தில், ரூ.4 கோடியைத் திருப்பித் தராமல் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் டி.தனவிமல் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் செலவுக்காக ரூ.4.50 கோடி வழங்கியதாகவும், அதில் ரூ.50 லட்சம் மட்டுமே திரும்பக் கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.-யிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், விஜயபாஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி மனுதாரர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.