திண்டிவனம் - புதுச்சேரி வழித்தடத்தில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 3 அரசு பேருந்துகள் மற்றும் 9 தனியார் பேருந்துகள் மீது வட்டார போக்குவரத்து ஆய்வாளர் முருகேசன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
நிர்ணயிக்கப்பட்ட 35 ரூபாய் கட்டணத்திற்கு பதிலாக 40 ரூபாய் வசூலித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, திண்டிவனம் ஜெயபுரம் மற்றும் கிளியனூர் பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கூடுதல் கட்டணம் வசூலித்த பேருந்து நடத்துனர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பரிந்துரை செய்துள்ளார்.