
மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமையில் சிக்கியுள்ள தற்போதைய நிலையில், ரூ. 1,200 கோடி கடன் வாங்கி புதிய தலைமைச் செயலகம் கட்டுவது அவசியமற்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் நிதிநிலை சீரான பின்பு, போக்குவரத்து நெரிசலற்ற, மக்களுக்கு பாதிப்பு இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட உத்தேசிக்கலாம் என்று அவர் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.