
தமிழகத்தில் ஜூலை மாத மின் கட்டண உயர்வு குறித்த புகார்களைத் தொடர்ந்து, 3.70 லட்சம் மின் இணைப்புகளில் நேரடி ஆய்வு செய்ய மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
மின் கட்டண கணக்கீட்டில் குளறுபடிகள் இருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தவறுதலாக வசூலிக்கப்பட்ட பணத்தை திரும்ப வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மின்சார வாரியத்தின் இந்த அதிரடி ஆய்வின் மூலம் நுகர்வோரின் புகார்கள் சரிபார்க்கப்பட்டு, உரிய தீர்வு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.