
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பள்ளி பேருந்து மோதிய விபத்தில் ஸ்கூட்டரில் சென்ற அன்பரசன் (50) மற்றும் சம்பத்குமார் (52) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தை ஏற்படுத்திய பேருந்தை ஓட்டியது பள்ளி வாகன ஓட்டுநர் அசோக் அல்ல, மாறாக உடற்கல்வி ஆசிரியர் கோபிநாத் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பள்ளி உரிமையாளர் ஆலன் ஜோஷ்வா ஸ்டீபன், கோபிநாத் ஒரு 'Transport Manager' என மழுப்பிய நிலையில், நல்லூர் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.