
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் 10-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுகள் நேற்றுடன் நிறைவடைந்தன.
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன.
நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் வெளியேற்றுதல் சுற்றில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் தகுதி பெறப் போட்டியிடுகின்றன.