அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பதவிக்காலம் 2029 ஜனவரி 20-ல் முடியும் வரை அவருடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என ஈரான் அரசு அறிவித்துள்ளது.
ஈரான் பார்லிமென்ட் சபாநாயகர் ஆலோசகர் மஜித் ஷகேரி, டிரம்ப் நிர்வாகத்துடன் எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படாது எனத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, ராணுவக் கட்டமைப்பை பலப்படுத்தி, அலி அப்தொல்லாஹியை தலைமை தளபதியாகவும், அகமது வஹிதியை ஐ.ஆர்.ஜி.சி. தளபதியாகவும் நியமித்துள்ளார்.