
ருமேனிய வான்வெளிக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத ட்ரோன் ஒன்றை, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அதிகாலை 5.01 மணியளவில் சுட்டுவீழ்த்தியது.
கலாட்டி நகருக்கு வடக்கே சுமார் 24 கிலோமீட்டர் தொலைவில் கண்டறியப்பட்ட இந்த ட்ரோன், மால்டோவா வழியாக ருமேனியாவுக்குள் நுழைந்ததாக ரேடார் தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜூலை மாதம் ரஷ்யாவின் 3 ட்ரோன்களை ருமேனிய போர் விமானங்கள் சுட்டுவீழ்த்திய நிலையில், தற்போது மீண்டும் ஒரு ட்ரோன் அத்துமீறியுள்ளது.