
காரைக்குடியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு கேரளா திரும்பிய நடிகர் மம்மூட்டிக்கு, வழி தெரியாமல் தவித்தபோது பாண்டியன் என்ற ரசிகர் 10 கி.மீ தூரம் பைக்கில் வழிகாட்டியுள்ளார்.
அதிகாலை 3:30 மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தை தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
ரசிகரின் அன்பால் நெகிழ்ந்த மம்மூட்டி, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.