
செப்டம்பர் 22-ம் தேதி ஜப்பானின் சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா-ஜப்பான் டி20 போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
இந்தியா-ஜப்பான் தூதரக உறவுகளின் 75-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக, சுசுகி கோப்பையின் கீழ் இந்தப் போட்டி நடைபெறுகிறது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டி, ஜப்பான் மற்றும் கிழக்கு ஆசியாவில் கிரிக்கெட் விளையாட்டை அறிமுகப்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.