
குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த ஒரு வாரத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 107 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில் மாநகரில் மட்டும் நேற்று மதுபோதையில் வாகனம் ஓட்டிய 11 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறி கனிம வளங்களை ஏற்றிச் சென்ற 34 டாரஸ் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.