
காங்கோ நாட்டின் தலைநகர் கின்ஷாசாவில் உள்ள லிங்வாலா பகுதியில் திருமண நிகழ்ச்சி நடைபெற்ற கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.
தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்த போதிலும், விபத்தில் சிக்கிய 22 பேர் பலியானதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த துயரச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள உள்ளூர் போலீசார், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.