
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் வறட்சி மற்றும் உப்பு நீரைத் தாங்கி வளரும் புதிய மரபணு திருத்தம் செய்யப்பட்ட நெல் ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
புஷா நெல் டிஎஸ்டி1 ரகம் 9.66% முதல் 30.4% வரை கூடுதல் மகசூல் தரும் என்றும், டிஆர்ஆர் தான் 100 ரகம் 130 நாட்களில் அறுவடைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரகங்களில் அந்நிய மரபணுக்கள் சேர்க்கப்படவில்லை என்பதால் இவை பாதுகாப்பானவை என்றும், விவசாயிகள் விதைகளை மீண்டும் பயன்படுத்தலாம் என்றும் அரசு உறுதிப்படுத்தியுள்ளது.