
தஞ்சை மாவட்ட விவசாயிகள் பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்யக் கோரி, சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள தமிழக சட்டமன்றம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெள்ளை நிற சாக்கு அணிந்து போராடிய விவசாயிகள், நெல் மற்றும் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதாகக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.