உக்ரைனின் க்ரிவி ரிஹ் நகரில் உள்ள வணிக வளாகத்தின் மீது ரஷியா நடத்திய இரட்டை ட்ரோன் தாக்குதலில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் 22 குழந்தைகள் உட்பட 130-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், 29 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பிராந்திய ராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மீட்புப் பணியாளர்களைக் குறிவைத்து அரை மணி நேரம் கழித்து நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதலை அதிபர் ஜெலன்ஸ்கி சர்வதேச பயங்கரவாதச் செயல் என கடுமையாகக் கண்டித்துள்ளார்.