
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் பெறப்பட்ட புகாரில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ஊழல் தடுப்பு சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் திருச்சியில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் நாளை சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு மகேஷுக்கு போலீசார் சம்மன் அளித்துள்ளனர்.