
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் முழு அடைப்பு போராட்டம் நடத்திய போதிலும், தமிழக அரசு பேருந்துகள் பெங்களூருக்கு வழக்கம் போல் இயக்கப்பட்டன.
எல்லைப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட கன்னட அமைப்பினர் கைது செய்யப்பட்ட பிறகு, போக்குவரத்து தடையின்றி நடைபெற்றது.
கர்நாடகாவில் 80 சதவீத கடைகள் திறந்திருந்த நிலையில், தமிழக எல்லைப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.