
பாகிஸ்தானின் நரோவால் மாவட்டத்தில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோயில் மதரஸா கட்டுவதற்காக இடிக்கப்பட்டதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தச் செயலில் தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான் அமைப்பினர் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் அரசு வெளிப்படையான விசாரணை நடத்த இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மறுபுறம், கனமழை காரணமாகவே பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததாக பாகிஸ்தானின் வெளியேறியோர் சொத்து அறக்கட்டளை வாரிய அதிகாரி ராணா இப்திகார் விளக்கம் அளித்துள்ளார்.