
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, முதலமைச்சர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை இயக்கினால் அதற்கு 'நெஞ்சில் குடியிருக்கும்' என்று தலைப்பிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
படத்தின் முதல் பாதியை விஜய்யின் சினிமா பயணமாகவும், இடைவேளைக் காட்சியாக அவரது அரசியல் பிரவேசத்தையும், இரண்டாம் பாதியை மக்கள் சேவையாகவும் அமைக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.
தற்போது விஜய் முழுநேர அரசியல் பணிகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், இத்தகைய பயோபிக் திட்டம் எதுவும் அதிகாரப்பூர்வமாக உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.