
அசாமில் வெள்ளத்தால் 70 பேர் பலியான நிலையில், நிவாரணப் பணிகளுக்காக பெரும்பாலான கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளனர்.
சபாநாயகர் ரன்ஜீத் குமார் தாஸ் மற்றும் துணை சபாநாயகர் ஹேப்பி தெரான் ஆகியோர் ஒரு மாத சம்பளத்தை வழங்குவதாக அறிவித்துள்ளனர், மேலும் சட்டசபை பணியாளர்கள் ஒரு நாள் சம்பளத்தை வழங்குகின்றனர்.
பா.ஜ.க., திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், ஏ.ஐ.யூ.டி.எப்., ஏ.ஜி.பி. மற்றும் பி.பி.எப். கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ராய்ஜோர் தள கட்சி மட்டும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.