மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த 47 வயது ரமாபாய் ரன்வீர், தனது மகள்களின் கல்விச் செலவிற்காக வெறும் கால்களுடன் ஓடி மாரத்தான் போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார்.
ரூ. 3,000 பரிசுத்தொகையை வென்ற ரமாபாயின் மகள் பூஜாவும் அதே போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
விவசாயக் கூலியாகப் பணியாற்றும் ரமாபாய், தனது மகள்களின் கனவை நனவாக்க சமையல் வேலை செய்துகொண்டே அவர்களைப் படிக்க வைத்து வருகிறார்.