
ஜிம்பாப்வேயின் சிவு அருகே நெடுஞ்சாலையில் மினிபஸ் மீது லாரி மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 27 பாதிரியார்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
ஹராரேவுக்கு தெற்கே 132 கி.மீ. தொலைவில் நடந்த இந்த விபத்தில், மொத்தம் 34 பேர் பயணித்த மினிபஸ் தீப்பிடித்து எரிந்ததில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
தேவாலயக் கூட்டத்திற்காகத் தேமாவில் இருந்து மவுமாவுக்குச் சென்றுகொண்டிருந்த இயேசு சபை துறவிகள் மற்றும் இளம் பாதிரியார்கள் இந்த விபத்தில் சிக்கினர்.