
திண்டுக்கல் மாவட்டத்தில் இடதுசாரிக் கட்சிகளின் விவரங்களைச் சேகரிக்கவும், போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கவும் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கைகளை த.வெ.க அரசு திரும்பப் பெற்றுள்ளது.
இந்த நடவடிக்கையை ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் செயல் என விமர்சித்துள்ள திமுக, முதலமைச்சரை மிஞ்சிய 'சூப்பர் பவர்' ஆட்சியில் தலையிடுகிறதா என கேள்வி எழுப்பியுள்ளது.
சுதந்திர தின விழாவில் நடிகை ஒருவரை முன்வரிசையில் அமர வைத்தது மற்றும் அரசு சுற்றறிக்கைகள் குறித்து முரசொலி தலையங்கத்தில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.