மண்டாடி திரைப்படத்தில் மீனவராக நடித்ததை பெரும் பாக்கியமாகக் கருதுவதாக நடிகர் சூரி கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் பகுதிகளில் நடைபெறும் பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்ட இப்படம், மீனவர்களின் வாழ்வியல் சிக்கல்களைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அயலான் பட இயக்குனருடன் தனது அடுத்த படம் செப்டம்பர் இறுதியில் தொடங்க உள்ளதாகக் கூறிய சூரி, மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.