
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் இன்று தள்ளுபடி செய்தார்.
சுமார் 100 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் இந்த வழக்கில், செந்தில் பாலாஜி மற்றும் விசாகன் உள்ளிட்ட 7 பேர் மீது கடந்த 28-ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதால், செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.