
2022 ஆகஸ்ட் 8-ம் தேதி நடந்த தாக்குதல் வழக்கு தொடர்பாக, புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு தமிழக நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய அமைச்சரின் மனுவை நிராகரித்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன், அமைச்சர் சட்டத்திற்கு மேலானவர் அல்ல என்று கண்டனம் தெரிவித்தார்.
வேளாங்கண்ணி ஆலய நிகழ்ச்சியில் பங்கேற்கச் செல்லும் அமைச்சரை, புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டுச் செல்லுமாறு அறிவுறுத்திய நீதிபதி, அவர் ஆஜராகும் தேதியைத் தெரிவிக்க உத்தரவிட்டார்.