பல்லடம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே ஒரு ஊழியர் மட்டுமே பணியாற்றுவதாகப் புகார் எழுந்துள்ளது.
இதனால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், கூடுதல் ஊழியர்களை நியமிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.