
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 9 ராமேஸ்வரம் மீனவர்களை மீட்க அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மீனவர் விவகாரத்தில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதுவது மட்டுமே தீர்வாகாது என அவர் விமர்சித்துள்ளார்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மீனவர் பிரச்சினையில் உணர்வுப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய அரசு, தற்போது கடமைக்குச் செயல்படுவதாக அவர் பதிவிட்டுள்ளார்.