
திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் உலக சந்தை வாய்ப்புகளைப் பெற செயற்கை இழை ஆடை தயாரிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.
பிர்லா செல்லுலோஸ் நிறுவனம் திருப்பூரில் சுமார் 100 சாய ஆலைகளுக்குத் தொழில்நுட்ப வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.
உலக அளவில் செயற்கை இழை ஆடைகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், நாட்டின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.