
தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியான வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதிக் கணக்கெடுப்பு பணிகள் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெறுகின்றன.
இந்த கணக்கெடுப்பு பணியில் 19,000 அதிகாரிகளின் மேற்பார்வையில் 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, 33 கேள்விகளைக் கொண்ட கேள்வித்தாள் மூலம் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக டிஜிட்டல் முறையில் நடைபெறும் இந்த கணக்கெடுப்பில், மக்கள் தங்கள் சுயவிவரங்களை ஆன்லைன் வாயிலாகத் தாமாகவே பதிவேற்றம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.