
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடந்த கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டியில், அமெரிக்க வீரர் பாபியானோ கரானாவை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.
இறுதிப்போட்டியில் 15-13 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா, கிராண்ட் செஸ் டூரில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு சுமார் ரூ.1.90 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது, மூன்றாம் இடத்திற்கான போட்டியில் வெஸெலி பார்போஸா வெற்றி பெற்றார்.